Homeசெய்திகள்அரசியல்எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

-

- Advertisement -

மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது? என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் உள்ளிட்ட ஏராளமான பணிகளை திமுக ஆட்சி முடிந்துள்ளது. இதுதான் பாஜக மாடலுக்கும் திமுக மாடலுக்கு உள்ள உள்ள வித்தியாசம் என்று கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

சேலத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,கடந்த 10 ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? முறையாக நிதி ஒதுக்கி இருந்தால் இரண்டே ஆண்டுகளில் கட்டி இருக்கலாம் என்றார்.

மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு என்று செய்த ஒரு சிறப்பு திட்டத்தையாவது மத்திய அரசு கூறட்டும் பார்க்கலாம். ஒன்பது ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தது. அதன் சாதனைகள் எல்லாம் சட்டமன்றத்தில் பட்டியலிட்டு கூறியுள்ளேன்.

மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள்? சொன்னால் செய்து காட்டும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் திமுக ஆட்சியில் பயன் பெற்றவர்களின் புள்ளி விவரங்களை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும் என்றும் பேசினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், தமிழ்நாட்டுக்காக செய்த ஒரு சிறப்பு திட்டத்தை கூற முடியுமா? 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு செய்த திட்டங்கள் என்ன?: அந்த பட்டியலை இதுவரை தரவில்லை. ஏனென்றால் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். கீழடி விவகாரம் கேட்டால் கூடுதல் நிதியை ஒதுக்கி இருக்கிறேன் என்கிறார்கள்..

அன்றைய பொருளாதாரம், விலைவாசி என்ன? தங்கம் விலை அன்று ரூ.5 ஆயிரம்.. இன்று ரூ.71 ஆயிரம்.. அதுமட்டுமல்ல, தமிழர்களின் தொன்மையை அழிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கையை போதவில்லை என்று கூறுகிறார் மத்திய அமைச்சர் ஷெகாவத்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோன போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா? டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

MUST READ