Homeசெய்திகள்இந்தியாகே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்

கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்

-

- Advertisement -

​கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை வகுப்பது, உள்ளூர் மீனவர்களின் பிரச்சினைகளை ஹார்முஸ் நீரிணை விவகாரங்களுடன் இணைப்பது எனப் பம்பரமாகச் சுழன்று வருகிறார். மேலும், பினராயி விஜயனை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, காங்கிரஸைத்தான் மாநிலத்தின் “உண்மையான இடதுசாரி” (Real Left) கட்சியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் வாக்காளர்களிடம் வலியுறுத்தி வருகிறார்.

கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்

we-r-hiring

​கே.சி. வேணுகோபாலுக்கு இவையெல்லாம் கேரளாவில் இருந்தபடியே பார்க்கும் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work from home) போன்றது. ஒரு நிமிடம் அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உயர்மட்டத் தலைவராகச் செயல்படுகிறார், அடுத்த நிமிடம் மாநிலத்தின் தேர்தல் களத்தில் ஒரு தளபதியாக இறங்கி வேலை செய்கிறார்.

​புதன்கிழமை (ஏப்ரல் 1, 2026) காலை 7 மணிக்கே தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட (FCRA) விதிகளில் மாற்றங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற வியூகத்தை அவர் தொலைபேசி வாயிலாக ஒருங்கிணைத்தார். கேரளாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மத்தியில் இந்த விவகாரம் மிகவும் உணர்வுபூர்வமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

​அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினாா். மேலும்,  63 வயதான வேணுகோபால், வடகேரளாவின் குட்டியாடி நகரில் நடைபெற்ற நடைப்பயணத்திற்கும் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் தேர்தல் பிரச்சாரம் – ராகுல் காந்தியின் அதிரடி குற்றச்சாட்டுகள்

MUST READ