Homeசெய்திகள்அரசியல்"விஜய் மௌனம் காக்கவில்லை; புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறார்!" – ரங்கராஜ் பாண்டே அதிரடி!

“விஜய் மௌனம் காக்கவில்லை; புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறார்!” – ரங்கராஜ் பாண்டே அதிரடி!

-

- Advertisement -

“2-ஆம் கட்டத் தலைவர்கள் மூலம் பதிலடி கொடுப்பது தெளிவான அரசியல் உத்தி” ஊடகவியலாளர் கணிப்பு!

"விஜய் மௌனம் காக்கவில்லை; புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறார்!" – ரங்கராஜ் பாண்டே அதிரடி!

we-r-hiring

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய்யின் மௌனம் மற்றும் அவரது அரசியல் உத்திகள் குறித்துப் புகழ்பெற்ற ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ‘ஐபிசி தமிழ்’ ஊடகத்திற்கு அளித்துள்ள அதிரடி நேர்காணலில் தனது முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

“விஜய் மௌனமாக இருக்கிறாரா? – இதுதான் மாஸ்டர் பிளான்!”
அரசியலில் விஜய் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளிப்பதில்லை என்றும், மௌனம் காப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதற்குப் பதிலளித்த ரங்கராஜ் பாண்டே,”அரசியலில் எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் தலைவரே நேரில் வந்துதான் பதிலளிக்க வேண்டும் என்பதில்லை. நிர்மல் குமார், செங்கோட்டையன், அமைச்சர் ராஜ்மோகன், அருள், ரமேஷ் எனப் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து தங்களது கருத்துகளைப் பேசிவருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது விஜய் நேரில் வந்து பதிலளித்தால் மட்டும்தான் அது கேள்வியாகும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? டெல்லியில் உள்ள பலமான தேசியத் தலைவர்களை எதிர்கொள்ள ஸ்டாலின் பின்பற்றிய அதே வியூகத்தைத்தான் இன்று தவெகவும் கையாண்டு வருகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலமாகத் தரப்படும் பதிலடிகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. இது விஜய்யின் பலவீனமல்ல; மாறாகக் தெளிவான அரசியல் உத்தி!”

“எதிர்க்கட்சிகள் ஏன் தோற்றுப் போயின?”
கடந்த காலங்களில் திமுகவை எதிர்த்துப் போராடுவதில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு சறுக்கின என்பது குறித்துப் பேசிய அவர், நீட் விவகாரத்திலாகட்டும், மேகதாது விவகாரத்திலாகட்டும் மக்கள் மத்தியில் தங்களது பலத்தை முழுமையாக நிரூபிப்பதில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கைக்கொண்ட மாற்று வழிகளில் தவெக மிக வலுவான இடத்தைப் பிடித்ததாகவும், அதிமுகவோ அல்லது பாஜகவோ போதிய அளவில் ஆக்ரோஷமான போராட்டங்களை முன்னெடுக்கத் தவறியதால்தான் அந்த இடத்தை விஜய் தட்டிச் சென்றார் என்றும் அவர் தெரிவித்தார்."விஜய் மௌனம் காக்கவில்லை; புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறார்!" – ரங்கராஜ் பாண்டே அதிரடி!

கூட்டணிக் கணக்குகளும் கார்த்திக் சிதம்பரத்தின் எச்சரிக்கையும்
காங்கிரஸ் தலைவர் கார்த்திக் சிதம்பரம் எழுப்பிய அரசியல் கணிப்புகள் குறித்துப் பேசிய பாண்டே, திமுகவும் பாஜகவும் அல்லது தவெகவும் அதிமுகவும் கைகோர்க்க வாய்ப்பிருப்பதாக யூகங்கள் எழுவது இயல்பே என்றார். தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் 2029 தேர்தல் இலக்குகளை மையமாக வைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்களது வியூகங்களை அமைத்து வருகின்றன. எனினும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கும் தமிழக காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாடுகளைத் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

சீமானின் விமர்சனமும் மாற்று அரசியலும்
தவெகவின் அரசியல் வருகை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பும் விமர்சனங்கள் குறித்துக் குறிப்பிடுகையில், “நீண்ட காலமாகச் சித்தாந்தம் பேசிவரும் சீமான், சினிமா பின்புலத்திலிருந்து வரும் ஒரு புதிய தலைவர் எளிதாக மக்கள் மத்தியில் இடம்பிடிப்பதை எதிர்ப்பது இயல்பே. இருப்பினும், தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணிகள் மற்றும் புதிய சக்திகளின் எழுச்சி என்பது வழக்கமான ஒன்றுதான். தவெகவின் அடுத்தடுத்த நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்கள் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.” என்று ரங்கராஜ் பாண்டே தனது நேர்காணலில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

“நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்வர்” — தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

MUST READ