Homeசெய்திகள்தமிழ்நாடுவாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி வழக்கு: தமிழ்நாடு அரசுக்குப் பதில் அளிக்க...

வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி வழக்கு: தமிழ்நாடு அரசுக்குப் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

-

- Advertisement -

“அரசு மற்றும் தனியார் துறைகளில் சுழற்சி முறையில் பணியமர்த்த குழு அமைக்க வேண்டும்” – அக்டோபர் 7-க்கு வழக்கு ஒத்திவைப்பு.வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி வழக்கு: தமிழ்நாடு அரசுக்குப் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

வழக்கின் பின்னணி மற்றும் கோரிக்கைகள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மனுதாரர் ஒருவர் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில் தெரிவித்திருந்ததாவது, “அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாரத்தில் 2 நாட்கள் விடுப்பு அளிக்கும் போது நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, சுழற்சி முறையில் (Rotational Shift) ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.”

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறைச் செயலர் உரிய பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் அக்டோபர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.

தவெகவில் விஜய் ரசிகர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? – ஊடகவியலாளர் கெப்ரியல் தேவதாஸின் பரபரப்புப் பேட்டி!

MUST READ