அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கட்டுப்பாடற்ற வர்த்தகக் கெடுபிடிகள் மற்றும் கூடுதல் வரி விதிப்புகளுக்கு மத்தியில், உலகளவில் யாருக்கும் அடிபணியாத ஒரு சுயசார்பு சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இது குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


1. ‘ஹெட்ஜிங்’ (Hedging) எனும் ஆபத்தைக் குறைக்கும் யுத்தி:
அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்காமல் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் கைகோப்பதன் மூலம், அமெரிக்காவின் வரி விதிப்புகளால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பை இந்தியா முன்கூட்டியே தடுத்து வருகிறது.
பிரதமர் மோடி கடந்த 2025 ஆகஸ்ட் முதல் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு பல உறுதியான பொருளாதார ஒப்பந்தங்களைச் செய்துள்ளார்.
அமெரிக்காவின் 25% கூடுதல் வரி விதிப்பு மற்றும் ட்ரம்ப்பின் தன்னிச்சையான கொள்கை மாற்றங்களைச் சமாளிக்க இந்தியா தனது ஏற்றுமதிச் சந்தைகளைப் பன்முகப்படுத்தி வருகிறது.
2. நடுத்தர வல்லரசுகளுடன் கைகோத்தல் & பலதரப்பு அணுகுமுறை:
நடுத்தர வல்லரசுகள்: அமெரிக்கா – சீனா மோதலில் சிக்காமல் இருக்க பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், தென்கொரியா போன்ற நடுத்தர வல்லரசுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது.
பலதரப்பு (Plurilateral) அணுகுமுறை: குறிப்பிட்ட இலக்குகளுக்காக சிறிய எண்ணிக்கையிலான நாடுகளுடன் இணைந்து, பலமான ‘விநியோக சங்கிலியை’ (Supply Chain) இந்தியா உருவாக்கி வருகிறது.
3. சமீபத்திய முக்கிய சர்வதேச ஒப்பந்தங்கள்:
ஐரோப்பிய ஒன்றியம் (EU): இரண்டு தசாப்தகாலப் பேச்சுவார்த்தைக்குப் பின், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.
ஜெர்மனி & பிரான்ஸ்: ஜெர்மனியுடன் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பக் கூட்டு; பிரான்சுடன் AI மற்றும் நிர்வாகத் துறை ஒத்துழைப்பு.
நார்வே (EFTA): இந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க நார்வே உறுதி.
தென் கொரியா: கப்பல் கட்டுமானத் துறை மற்றும் முதலீடுகளுக்கான கூட்டாண்மை.
பிரிட்டன்: ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஆடைகள் மீதான வரிகுறைப்பு ஒப்பந்தம்.
4. வெளிநாட்டுப் பயணங்கள் – அந்நிய முதலீடு (FDI):
2021 ஏப்ரல் முதல் 2025 டிசம்பர் வரை, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ராஜதந்திர முயற்சிகளால் இந்தியாவுக்கு 381.80 பில்லியன் டாலர் நேரடி அந்நிய முதலீடு (FDI) வந்துள்ளது.
2021 ஜூலை முதல் இதுவரை 316 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
சுருக்கம்:
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அஞ்சாமல், தனது நீண்டகாலப் பாதுகாப்புக் கொள்கைகளிலிருந்து விலகி, உலக நாடுகளுடன் இணக்கமான வர்த்தக உறவை ஏற்படுத்தி இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதிசெய்து வருகிறார் என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ சுட்டிக்காட்டியுள்ளது.
