உலகையே உலுக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11, 2026) உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2001 செப்டம்பர் 11 – உலகை உலுக்கிய கொடூரம்
கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, அல்-கொய்தா தீவிரவாதிகள் 4 பயணிகள் விமானங்களை அதிரடியாகக் கடத்தினர். அதில் 2 விமானங்கள் நியூயார்க்கின் அடையாளமாகத் திகழ்ந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது வரிசையாக மோதி வெடித்துச் சிதறின. மூன்றாவது விமானம் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் கட்டிடம் மீது மோதியது. நான்காவது விமானம் பென்சில்வேனியாவின் ஷாங்க்ஸ்வில் பகுதி வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.

3,000 உயிர்களைப் பலிகொண்ட பேரழிவு
இந்தத் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள், மீட்புப் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் என சுமார் 3,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மனித குலத்திற்கு எதிரான இக்கொடூரச் சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், அதன் வடுவும் ஆறாத் துயரமும் உலக மக்கள் மனதில் இன்னமும் அகலாமல் இருந்து வருகிறது.
உலகத் தலைவர்கள் அஞ்சலி
25-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நியூயார்க் தாக்குதல் நடந்த ‘கிரவுண்ட் ஜீரோ’ (Ground Zero) நினைவிடத்தில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், அமெரிக்க அரசு உயர் அதிகாரிகளும் உலகத் தலைவர்களும் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தித் தங்களது ஆழந்த அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் பேரதிர்ச்சி: இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்!
