
வரும் மே 28- ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில், சோழர் காலத்து செங்கோலின் மாதிரி நிறுவப்படவுள்ளது.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 970 கோடி ரூபாய் செலவில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்கங்களும், பல்வேறு அலுவலகங்களும், ஆலோசனை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் மே 28- ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார். அப்போது, சோழர் காலத்து செங்கோல் மாதிரி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளது.
இந்த சோழர் காலத்து செங்கோல் மாதிரிக்கு பழமையான வரலாறு உள்ளது. கடந்த 1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படும் முன்பாக, ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது. செங்கோலானது நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அரசு நடைபெறுகிறது என்பதை புனித சின்னம் என்று கூறப்படுகிறது.
செங்கோலின் உச்சியில் நந்திச் சின்னம் இடம் பெற்றிருக்கும். இந்தியாவின் அதிகாரத்தைப் பரிமாற்றம் செய்யும் வகையில் சோழர் காலத்து மாதிரி செங்கோல், தமிழ்நாட்டின் திருவாடுவதுறை ஆதீனத்தின் மூலமாக பிரிட்டிஷ்காரரிடம் இருந்து ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா – ஜனாதிபதி வருகை ரத்து
நேரு பெற்ற செங்கோல் பின்னர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது 75 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பின் போது, நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியிடம் சோழர் காலத்து செங்கோல் வழங்கப்படவிருக்கிறது. கடந்த முறையைப் போல் இல்லாமல் இம்முறை சபாநாயகர் இருக்கைக்கு அருகே சோழர் காலத்து செங்கோல் மாதிரி வைக்கப்படவிருக்கிறது.
அதுமட்டுமின்றி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில், இந்த செங்கோல் நாட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.