
உலகக் கோப்பை செஸ் போட்டியில் டை பிரேக்கர் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – தனபால்
அஸர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் கிளாசிக் சுற்றுகள் டிராவான நிலையில், இன்று (ஆகஸ்ட் 24) மாலை 04.00 மணிக்கு டை பிரேக்கரின் முதல் சுற்று போட்டி நடைபெற்றது. டை பிரேக்கர் முதல் சுற்றில் வெள்ளை நிறக் காய்களைத் தேர்வுச் செய்து விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா, கடைசி வரை போராடிய நிலையில் தோல்வி அடைந்தார். நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்:
முதல் சுற்றில் பிரக்ஞானந்தா போராடி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டை பிரேக்கர் சுற்று சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் முன்னிலையில் உள்ள நிலையில், டை பிரேக்கர் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா.