spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமை திட்டத்தில் ரூ.1,000 வரவில்லை?- நாளை முதல் உதவி மையம்

மகளிர் உரிமை திட்டத்தில் ரூ.1,000 வரவில்லை?- நாளை முதல் உதவி மையம்

-

- Advertisement -

மகளிர் உரிமை திட்டத்தில் ரூ.1,000 வரவில்லை?- நாளை முதல் உதவி மையம்

மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு நாளை முதல் உதவி மையம் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

we-r-hiring

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்ப பதிவு உளிட்டவை குறித்து உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம். ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு தொகை வராமல் இருப்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு உதவி மையத்தில் தீர்வு காணலாம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாளை முதல் உதவி மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரரகளுக்கு இன்று முதல் கைபேசி எண்ணிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். மீண்டும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

MUST READ