வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு மனநல பாதிப்பு
அரக்கோணத்தில் வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடிய 18 வயது மாணவர் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டு பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த காலிபாரி கண்டிகை பகுதியைச் சேர்ந்த தீபன். 18 வயதான இவர், 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் தற்போது இருந்துள்ளார். இவரது தந்தை இறந்த நிலையில், அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். தாய் மற்றும் இவர் வீட்டில் உள்ள நிலையில், இவர் வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வரை நன்றாக இருந்த தீபன் திடீரென்று இன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர், போன்று நடந்து கொண்ட சம்பவம் வீட்டில் இருந்த அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த பெற்றோர்கள், மேலும் அவருக்கு அங்கே முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடிய மாணவன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.