spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநிதி பற்றாக்குறையால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம்!

நிதி பற்றாக்குறையால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம்!

-

- Advertisement -

நிதி பற்றாக்குறையால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம்!

நிதி பற்றாக்குறையால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டம்: `செயலி மூலம் வருகைப் பதிவு' - காங்கிரஸ்  எதிர்ப்பும், பாஜக பதிலும்! | Attendance registration through the app for 100  days scheme - Vikatan

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் வருகிறது. 93 லட்சம் பேர் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 65 லட்சம் பேர் தான் பணி செய்து வருவதாகவும், அதில் 86% பெண்கள்,14% ஆண்கள், 50% ஆதிதிராவிட மக்கள் பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் 10 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.89,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் நிதி குறைப்பால் இத்திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி டதிட்டம் 205 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நீர் நிலைகளை புதுப்பித்தல், ஏரி, குளம் பராமரிப்பு, மரம் நடுதல்,காடு வளர்ப்பு, பாசனக் கால்வாய் பராமரிப்பு, தூய்மை பணி மேற்கொள்ளுதலே இத்திட்டத்தின் பணிகளாகும்.

MUST READ