spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் 14 பேர் உயிரிழப்பு!

ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் 14 பேர் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் 14 பேர் உயிரிழப்பு!
Video Crop Image

ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர். இதனால் 18 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

we-r-hiring

கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம், கண்டகப்பள்ளியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், சிக்னல் கோளாறு காரணமாக நின்றுள்ளது. அப்போது, குண்டூரில் இருந்து ராய்கடா நோக்கிச் சென்ற பயணிகள் விரைவு ரயிலும் அதே பாதையில் வந்ததால், பலாசா ரயிலின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதில், ரயில் ஓட்டுநர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 50- க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விபத்துப் பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் இணைந்துள்ளனர்.

களமச்சேரி குண்டுவெடிப்பு- டொமினிக் மார்டின் வாக்குமூலம்!

இரவு நேரம் என்பதால், மீட்புப் பணிகளில் தொய்வுக் காணப்படுகிறது. அண்மையில் ஒடிஷாவின் பலோசாவில் ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ