
கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என ஆஜரான டொமினிக் மார்டின், சமூக வலைதளம் மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார். எகோவாவின் அமைப்பு தவறான இயக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
கேரளா மாநிலம், கொச்சி அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு தான் காரணம் என டொமினிக் மார்ட்டின் என்பவர், கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அதற்கு முன்னதாக, அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “குண்டு வெடிப்புக்கு முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். 16 ஆண்டுகளாக யெகோவாவின் அமைப்பில் இருந்தேன், பின்னர் அது தவறான இயக்கம் என அறிந்து வெளியேறினேன். யெகோவாவின் அமைப்பின் போதனைகளை திருத்துமாறு பலமுறை வைத்த கோரிக்கை நிறைவேற்றவில்லை.
கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!
குழந்தைகளுக்கு பல கெட்ட விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. தேசியக் கீதம் பாடக்கூடாது, வாக்களிக்கக் கூடாது என யெகோவாவின் அமைப்பு தெரிவிக்கிறது. யெகோவாவின் அமைப்பு நாட்டுக்கு ஆபத்தானது என்பதால் இந்த முடிவை எடுக்க துணிந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.