spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'பட்டத்து யானை' எனும் நாவலில் இருந்து சுடப்பட்டதா 'கேப்டன் மில்லர்' படம்?..... வேல ராமமூர்த்தி பேட்டி!

‘பட்டத்து யானை’ எனும் நாவலில் இருந்து சுடப்பட்டதா ‘கேப்டன் மில்லர்’ படம்?….. வேல ராமமூர்த்தி பேட்டி!

-

- Advertisement -

கேப்டன் மில்லர் திரைப்படம் பட்டத்து யானை எனும் நாவலில் இருந்து திருடி எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இது குறித்து எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி பேசியிருக்கிறார்.

'பட்டத்து யானை' எனும் நாவலில் இருந்து சுடப்பட்டதா 'கேப்டன் மில்லர்' படம்?..... வேல ராமமூர்த்தி பேட்டி!கடந்த ஜனவரி 12ஆம் தேதி தனுஷ் நடிப்பில் அருள் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை பற்றி படம் பேசுகிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்று தருகிறது.

we-r-hiring

இந்நிலையில் நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி, கேப்டன் மில்லர் படத்தின் கதை தனது நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார். வேலராமமூர்த்தி மதயானை கூட்டம், சேதுபதி, கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் எனும் சீரியல் நடித்து வருகிறார். இவர் குருதியாட்டம், குற்றப்பரம்பரை, அரியநாச்சி உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். அந்த வகையில் பட்டத்து யானை எனும் நாவலையும் எழுதி இருக்கிறார். இந்த பட்டத்து யானை எனும் நாவலின் கதையை திருடிதான் கேப்டன் மில்லர் படத்தை உருவாக்கி இருப்பதாக வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.'பட்டத்து யானை' எனும் நாவலில் இருந்து சுடப்பட்டதா 'கேப்டன் மில்லர்' படம்?..... வேல ராமமூர்த்தி பேட்டி! இது குறித்து பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கேப்டன் மில்லர் படம் என்னுடைய பட்டத்து யானை நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நேர்மையே இல்லை. இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். எனது கதை திருடப்பட்டது குறித்து திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிட இருக்கிறேன். இதற்கு இயக்குனர் பாக்கியராஜ் நியாயம் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். பட்டத்து யானை நாவலில் வரும் ரண சிங்கம் எனும் கதாபாத்திரத்தின் வாழ்வியலை தான் கேப்டன் மில்லர் படமாக உருவாக்கியுள்ளனர். நான் எழுதிய நாவலின் பல சுவாரஸ்ய சம்பவங்களையே படமாக்கி இருக்கின்றனர். ஏற்கனவே இந்த கதையை நான் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். படைப்பு திருடப்பட்டுள்ளதாக நான் முதலில் சர்ச்சையை கிளப்பவில்லை. என் வாசகர்கள் சொன்ன பின் தான் இந்த கதை திருடப்பட்டிருப்பது என் கவனத்திற்கு வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பயணிக்கும் என்னிடம் இதை கூறிவிட்டு செய்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதுபோன்று என் ஏராளமான எழுத்துக்கள் திருடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திற்கு செய்வதற்காகவோ, பணத்தையோ, பொருளையோ கருதியை நான் பேசவில்லை. நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பு. ஒரு நாவலை மண்வாசனைனோடு எழுதுவது மிகவும் கடினம். அதனை எளிதில் சொல்லாமல் படமாக்கி விடுகிறார்கள். தனுஷ் என்னை அப்பா என்று தான் அழைப்பார். அவர் எனக்கு மகன் மாதிரி. படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜனுக்கும் தனுஷுக்கும் நாவலில் இருந்து கதை திருடப்பட்டிருப்பது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. கதை சொல்பவர்கள் தான் மற்றவர்களுடைய கதையை தங்களுடைய சொந்தக் கதை என சொல்லிவிடுகிறார்கள். என்னுடைய நாவலை பலரும் வாசிக்கின்றனர். அந்த அளவு உயர்ந்த இடத்தில் இருக்கும் நாவலை இப்படி படமாக எடுப்பது என் பிரச்சனை கிடையாது. நான் கேட்பது என் கதையை எடுக்கும்போது என்னிடம் அந்த தகவலை கூற வேண்டும் என்பதுதான். என் வாழ்நாளில் நான் பார்க்காத புகழா, பெயரா, பணமா? எனக்கு தேவை எல்லாம் படைப்புக்கான நியாயமும் நேர்மையுயும்தான். அது வேணும் அது இங்கு இல்லை. இது மிகப்பெரிய தவறு. இதற்கு நியாயம் வேண்டும்” என்று பேசியுள்ளார்.

MUST READ