- Advertisement -
பிரபல எழுத்தாளர் ஜெயமோகனனிம் மகனின் திருமண விழாவில், திரை நட்சத்திரங்கள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
தமிழகத்தின் முக்கிய மற்றும் பிரபலமான எழுத்தாளர் ஜெயமோகன். இவரது புத்தகங்கள் பலரின் விருப்ப புத்தகங்கள் ஆகும். சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு வாசகர்கள் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இவர் புத்தகங்களுக்கு மட்டுமில்லாமல் திரைப்படங்களுக்கும் வசனங்கள் எழுதி இருக்கிறார். நான் கடவுள் படத்தில் தொடங்கி கடல், அங்காடித் தெரு, நீர்ப்பறவை, 6 மெழுகுவர்த்திகள், காவியத் தலைவன், சர்கார், பாபநாசம், வெந்து தணிந்தது காடு என பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார்.
