- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் அக்ஷய் குமார், அர்ஜூன் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் அசத்தும் ஜாக்குலின் அடுத்தடுத்து பல படங்கலில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்தார். ஆனால், தற்போது சினிமாவிலிருந்து இடைவெளி எடுத்துள்ளார். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த இடைத்தரகர் சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



