spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிங்கந்தர் படப்பிடிப்பில் இணைந்தார் ராஷ்மிகா... மும்பையில் படப்பிடிப்பு தீவிரம்...

சிங்கந்தர் படப்பிடிப்பில் இணைந்தார் ராஷ்மிகா… மும்பையில் படப்பிடிப்பு தீவிரம்…

-

- Advertisement -
மும்பையில் நடைபெற்று வரும் சிக்கந்தர் படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாகவும், இந்திய சினிமாவின் டாப் நட்சத்திரமாகவும் வலம் வருபவர் சல்மான் கான். பாலிவுட் திரையுலகில் சல்மான் கானுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அன்று முதல் இன்று வரை இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு குறைந்ததே இல்லை. கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து அதில் வெற்றி பெறுவதில் மிகவும் கில்லாடியானவர் நடிகர் சல்மான் கான். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் கமர்ஷியல் படங்களாகவும், நாட்டுப்பற்றை மையப்படுத்திய படங்களாகவும் தான் உள்ளன.

இறுதியாக அவரது நடிப்பில் டைகர் 3-ம் பாகம் திரையரங்குகளில் வெளியானது. மனீஷ் ஷர்மா இயக்கி இத்திரைப்படத்தில் கத்ரீனா நாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பிரபல கோலிவுட் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் திரைப்படத்தில் சல்மான் கான் நாயகனாக நடித்து வருகிறார். வர்தா நதியத்வாலா இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், கரீனா கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், சத்யராஜ் ஆகிய மூவரும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் சிக்கந்தர் படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். விரைவில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ