- Advertisement -
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறாா். தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளாா்.


2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறாா். இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஸ்டாலின் அதிகளவு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும் நிலையில் கொளத்தூர் தொகுதியில் இறுதி முடிவை அனைவரும் எதிர்பார்த்து கவனித்து வருகின்றனர்.
