spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅமித்ஷாவுக்கு முரட்டு முட்டு! ஆளே மாறிய எடப்பாடி! மதுரையில் கூடிய 30 ஆயிரம் பேர்!

அமித்ஷாவுக்கு முரட்டு முட்டு! ஆளே மாறிய எடப்பாடி! மதுரையில் கூடிய 30 ஆயிரம் பேர்!

-

- Advertisement -

அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகள் வளர்த்துவிடப்பட்டது. தற்போது அதிமுகவே ஆர்.எஸ்.எஸ். மயமாகி கொண்டிருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் நாதன், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால் இது சாமி கும்பிடுவதற்கான மாநாடு தானா? என்பதுதான் கேள்வியாகும். இது நேரடியாக பாஜக – சங்பரிவார் அமைப்புகள் நடத்தக்கூடிய மாநாடு ஆகும். தமிழ்நாட்டில் 1982ல் மண்டைக்காடு கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தை ஒட்டிதான் இந்து முன்னணி என்று தொடங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதே கொள்கைகளோடு தொடங்கப்பட்ட இந்து முன்னணி அமைப்புக்கு, தாணுலிங்க நாடாரை தலைவராகவும், ராம. கோபாலனை அமைப்பாளராகவும் நியமித்தார்கள். அப்போது முதல் தமிழ்நாடு முழுக்க இந்து எழுச்சி மாநாடு, இந்து ஒற்றுமை மாநாடு போன்றவற்றை தொடர்ந்து நடத்துகிறார்கள். கன்னியாகுமரியாக இருந்தால் கிறிஸ்தவர்களை எதிர்த்தும், நெல்லை, தென்காசி என்று வந்தால் முஸ்லீம்களை எதிர்த்து பேசுவதாக இருக்கும். இப்படிதான் அவர்களது கடந்தகால வரலாறு உள்ளது.

இந்த மாநாடுகள் அனைத்து இந்து என்கிற உணர்வை ஊட்டுவதற்காக நடத்தப்பட்ட மாநாடுகளாகும். ஆனால் அது எடுபடவில்லை. ஏனென்றால் அவர்கள் பேசிய இந்துத்துவாவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடமாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்திய இந்துத்துவா மாடலை, தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக தான் இந்த மாநாடு ஆகும். எடப்பாடி பழனிசாமி சொல்வது போல, இது சாமி கும்பிடுவதற்கான மாநாடு மட்டும் அல்ல. பக்தியை இந்துத்துவா உணர்வாக மாற்ற முடியுமா? என்பதற்காக தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அப்படி இருக்கிறபோது இந்த மாநாட்டிற்கு எடப்பாடி வாழ்த்து சொன்னால் எடப்பாடி எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும். அல்லது தெரிந்தே அவர்களுடைய சூழ்ச்சிக்கு இடம் கொடுத்திருக்கிறார். கடந்த கால வரலாற்றை பார்த்தோம் என்றால் அதிமுக, பாஜகவின் ஒரு இயற்கையான கூட்டாளியாக இருந்துள்ளது. வாக்கு அரசியல் நிர்பந்தம் காரணமாக ஜெயலலிதா, பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று பெயரளவுக்காவது சொன்னார்கள். ஆனால் எடப்பாடி காலத்தில் முழுக்க முழுக்க பாஜகவிடம் சரணடைந்துவிட்டனர். பாஜகவின் வளர்ச்சி என்பது பகுத்தறி வாதம் பேசினால் தண்டனைக்குரிய குற்றம் என்கிற நிலைமையை ஏற்படுத்திவிட்டது. மற்றொருபுறம் மக்களின் பொருளாதா வளர்ச்சி காரணமாக ஆன்மீக நாட்டம் அதிகரித்துள்ளது.

ஒரு கற்பனைக்காக எடுத்துக்கொள்வோம். அதிமுக – பாஜக கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதில் பாஜக முக்கிய பங்கு வகித்திருந்தால், மதிய உணவில் இருந்து முட்டையை நீக்குவார்கள். ஏன் என்றால் வடஇந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் முட்டை கிடையாது. இதுதொடர்பாக தரவுகளை ஆய்வு செய்தபோது வடஇந்திய குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடன் காணப்படுகிறார்கள். அவர்களுக்கு போதிய வளர்ச்சியோ, எடையோ இருப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டு குழந்தைகள் கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாகவோ, அல்லது அதை விட சற்று குறைவான எடை மற்றும் வளர்ச்சியுடன் உள்ளனர். அடுத்தபடியாக இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும். உ.பி.யில் பாங்கு ஓசை கேட்கக்கூடாது. அதேபோல், தமிழ்நாட்டிலும் தடை விதிப்பார்கள். ராஜஸ்தான், குஜராத் போன்ற பாஜக ஆளுகிற மாநிலங்களில் இறைச்சி சாப்பிட வேண்டும் என்றால் நீங்கள் தேடி அலைய வேண்டும் .அயோத்தியை சுற்றுவட்டார பகுதிகளில் 20 கி.மீ தொலைவுக்கு இறைச்சி கடைகளே வைக்கக்கூடாது என்று சொல்லியுள்ளனர். ஆனால் தமிழக ஆளுநர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ கடைகளை அகற்ற முயற்சி செய்வேன் என்று சொல்கிறார்.

அப்போது பாஜக ஆட்சிக்கு வந்தது என்றால் தமிழ்நாடு ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களும் கோவில் நகரங்கள் தான். அதனால் கோவிலை சுற்றி இறைச்சி கடைக்கடைகள் வைக்காதீர்கள். ஜோதிடம், ஜாதகம் பார்ப்பது போன்றவற்றை பல்கலைக்கழக பட்டப் படிப்புகளில் வைப்பார்கள். சிறுபான்மை மக்கள் ஏதேனும் போராட்டம் நடத்தினால் புல்டோசர் வரும். இப்படி இந்துத்துவாவின் ஒரு கொடுங்கோல் ஆட்சிதான் வரும். அறிவியல் ரீதியாக,  பகுத்தறிவு ரீதியாக திராவிட இயக்கங்கள் போராடி பெற்ற சமூகநீதி, இடஒதுக்கீடு போன்றவை எல்லாம் கேள்விக்குறியாகி விடும். அதனால் முருக பக்தர்கள் மாநாட்டை  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தனியரசு ஒருமுறை நேர்காணலில், கோவை பகுதியில் உள்ள அதிமுக அலுவலகங்கள் எல்லாம், ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் போன்று உள்ளதாகவும், பாரதமாதா புகைப்படம் அங்கு உள்ளதாகவும் சொல்லி இருந்தார். எஸ்.பி. வேலுமணியின் அலுவலகத்தில் மோடியின் படம் இருந்ததாக சொன்னார். இப்படி அதிமுக அலுவலகங்கள் ஆர்எஸ்எஸ் அலுவலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை, அதிமுக மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். எடப்பாடி அவரை நீக்குவது போல நீக்கிவிட்டு மீண்டும் அதிமுகவில் சேர்த்துவிட்டார். எதற்கு நீக்கினீர்கள்? எதற்கு சேர்த்தீர்கள்? அப்போது அதிமுகவே இன்றைக்கு ஆர்எஸ்எஸ் மயமாகி கொண்டிருக்கிறது.

அதிமுக முடிவு

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் பொதுவெளியில் தங்களுடைய மத அடையாளங்களை காண்பித்துக்கொள்வது மிகவும் குறைவு. சேகர்பாபுவை தவிர்த்து, திமுகவில் வேறு யாரையும் அப்படி பார்க்க முடியாது. கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் கட்சிகளில் அப்படி பார்க்க முடியாது. ஆனால் அதிமுகவில் அத்தனை தலைவர்களும் நெற்றியில் பொட்டு, விபூதி போன்ற அடையாளங்களோடு வருவார்கள். கைகளில் பல வண்ண கயிர்களை கட்டிக்கொண்டிருக்கிறாரகள். இதெல்லாம், அதிமுக என்பது ஆர்எஸ்எஸ் மயமாகிவிட்டது என்பதற்கான அர்த்தமாகும். அதிமுக காலத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது. அந்த அமைப்பின் முகாம்கள், ஊர்வலங்கள் எந்த பிரச்சினையும் இன்றி நடைபெற்றன. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ஆர்எஸ்எஸ் முகாம்களுக்கு தடை விதித்தனர். அதிமுக என்பது தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணியை வளர்த்துவிட்ட ஒரு கட்சியாகும். ஜெயலலிதாவுக்கு வழிகாட்டி சோ. அவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர் ஆவார். அப்போது இவர்கள் எல்லோரும் கூட்டு சேர்ந்து வளர்த்துவிட்டுள்ளனர். அதனால் அதிமுக என்றைக்கோ ஆர்எஸ்எஸ் மயமாகிவிட்டது. இன்றைக்கு எடப்பாடி, அமலாக்கத்துறை சோதனையாலும், மற்ற பிரச்சினைகள் காரணமாகவும், பாஜகவில் அடிமையாக சிக்கிவிட்டார். சிக்கிய பின்னர் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் மயமான அதிமுக, முழு சங்கியாக மாறிக்கொண்டு இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ