அதிமுகவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ஏராளமான களேபரங்கள் நடைபெறுவதாகவும், அன்புமணியை எம்.பி. ஆக்க பாஜக பரிந்துரை செய்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக பிரபல யூடியுப் சேனலுக்கு த்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பில் திமுக மிகவும் உறுதியாக முடிவு எடுத்துவிட்டார்கள். திமுக மட்டும் மனசு வைத்திருந்தால் அதிமுகவின் பாடு திண்டாட்டம் ஆகி இருக்கும். திமுக 4 வேட்பாளர்களை அறிவித்தது உடன் நிறுத்திக்கொண்டார்கள். 5வது வேட்பாளரை அறிவித்து போட்டி ஏற்படுத்தி இருந்தால் அதிமுக திணறி இருக்கும்.
அதிமுகவில் 2 வேட்பாளர்களை தீர்மானிக்க மொத்தம் 68 வாக்குகள் தேவை. அதிமுக கூட்டணியில் 75 பேர் இருந்தாலும், 4 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் போய்விட்டார்கள். 5 பேர் பாமக, 4 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர். அப்போது, பாமக, பாஜக, ஒபிஎஸ் ஆகியோரது கால்களில் எடப்பாடி விழுந்துதான் ஆக வேண்டி இருக்கும். தற்போது அதற்கு அவசியம் ஏற்படாது. இரட்டை இலை சின்னம் பிரச்சினையில் இருப்பதால் எடப்பாடி பார்ம் பி படிவத்தில் கையெழுத்து போடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக சாதகமாக செயல்படும் என்று எடப்பாடி நம்புகிறார். ஆனால் இவை எல்லாம் சிக்கல்தான்.
திமுக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பாக அனைத்து கூட்டணி கட்சிகளையும் அழைத்து பேசிவிட்டனர். துரை வைகோவுக்கு எம்.பி. சீட் கொடுக்கிறபோதே வைகோவிடம் சொல்லிவிட்டனர். இது தொடர்பாக ஸ்டாலினே வைகோவிடம் பேசிவிட்டார். கமல்ஹாசன், ஏற்கனவே மாநிலங்களவை சீட் தருவதாக ஒப்பந்தம் போட்டிருந்த்னர். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு நெருக்கமான சிவலிங்கத்திற்கு சீட் கொடுத்துள்ளனர். வில்சனை நீங்கள் தவிர்க்கவே முடியாது. சமீபத்தில் அவர் ஆளுநர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிறப்பாக செயல்பட்டார்.
அதிமுக தரப்பில் 2 வேட்பாளர்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக நடைபெறுகிற சண்டைதான் ரொம்ப பெரிதாக உள்ளது. ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்தியன், அதிமுக ஐ.டி. விங்கிற்காக தனது சொத்துக்களை விற்று செலவு செய்து வருகிறார். கோவை சத்தியன் போன்றவர்கள் சொதப்புகிற சூழலில் ராஜ்சத்யன் சிறப்பாக செயலாற்றி வருகிறார். விந்தியா, கோகுல இந்திரா, வளர்மதியா என்று பேசப்பட்டது. திமுகவில் சல்மா தேர்வு செய்யப்பட்டதால் பெண் வேட்பாளர் வேண்டும் என்று சொல்லப்பட்டது. முன்னாள் அமைச்சர் செம்மலைக்கும் மாநிலங்களவை சீட் தருவது குறித்து பேச்சு போகிறது. செம்மலை தாராமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார்.
இதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் மாநிலங்களவை சீட் வழக்குவது குறித்து பேசப்படுகிறது. ராயபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியால் பாதிக்கப்பட்டவன் என்று ஜெயக்குமார் வெளிப்படையாக பேசினார். தற்போது மீண்டும் அதிமுக கூட்டணியில் அவர் ராயபுரத்தில் போட்டியிட முடியாது. சென்னையில் வேறு எங்கு போட்டியிட்டாலும் தோற்கடித்துவிடுவார்கள். அதனால் அவர் மாநிலங்களவை எம்.பி ஆக மள்ளுக்கட்டிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் தற்போது ஓய்வுபெறும் ஒருவர் அருந்ததியர் பிரிவை சேர்ந்தவர். அதனால் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரை எம்.பி. ஆக தேர்வு செய்யலாம். அப்படி பார்த்தோம் என்றால் ராஜ் சத்யன், இன்பதுரை, செம்மலை, ஜெயக்குமார், கோகுல இந்திரா, விந்தியா உள்ளிட்ட 20 பேர் நிற்கிறார்கள்.
இதற்கு மத்தியில் பாஜக அன்புமணியை சிபாரிசு செய்கிறார்கள். இதில் மற்றொரு விஷயம் ராஜ்சத்யனும், மிதுன் பழனிசாமியும் மிகவும் நெருக்கமானவர்கள். கடந்த முறை அதிமுகவிற்க வியூக அமைப்பாளராக இருந்த சுனில், தற்போது உதயநிதிக்காக வேலை செய்கிறார். அவர் மிதுனுக்கு மிகவும் நெருக்கமானவர். நடிகர் விஜய் உடனான பேச்சுவார்த்தைகளையும் மிதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படி நிழலான செயல்களை செய்து கொண்டிருக்கும் மிதுன், அதிமுகவில் உறுப்பினர் கூட கிடையாது. எடப்பாடியின் வாரிசு என்ற அடிப்படையில் செயல்படுகிறார்.
செம்மலை, அதிமுகவின் மூத்த உறுப்பினர் ஆவார். ஓபிஎஸ் அணியில் இருந்து வந்ததால் மிகவும் பாதிப்பிற்குள்ளானார். அவருக்கான எந்த முக்கியத்துவத்தையும் எடப்பாடி வழங்கவில்லை. தற்போது செம்மலை சீட் கேட்கிறபோது, அதுவும் தொங்கலில் தான் உள்ளது. தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் சீட் கொடுக்கப்படலாம். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் தான் இடம்பெறும். ராஜ்யசபா அடுத்தமுறை வழங்குவதாக கூறி ஏமாற்றிவிடுவார்கள். சசிகலாவுக்கே அல்வா கொடுத்தவர். தேமுதிகவுக்கு எழுதப்பட்ட ஒப்பந்தத்தை மீறி அல்வா கொடுக்க மாட்டாரா? அதிமுகவில் ராஜ்யசபா தேர்லையொட்டி நடைபெறுகிற களேபரங்கள் ரொம்ப ரொம்ப வித்தியாசமாகவும், பல செய்திகள் நம்ப முடியாதவையாகவும் உள்ளன. திமுகவில் 4 வேட்பாளர்கள் அமைதியாக முடிந்துவிட்டது. ஆனால் 2 பேரை தேர்வு செய்வதற்கு இவ்வளவு பிரச்சினைகள் எழுகிறது.