Homeசெய்திகள்கட்டுரை டேஞ்சர் கேம்! அதிமுக - தவெக - பாஜக டீல்! உடைத்து பேசும் தராசு ஷ்யாம்!

 டேஞ்சர் கேம்! அதிமுக – தவெக – பாஜக டீல்! உடைத்து பேசும் தராசு ஷ்யாம்!

-

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியின் பிம்பம் சரிவை சந்திக்கும் என்றும், அதிமுக பலவீனமடைவதை பாஜக விரும்புவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தவெக தலைவர் விஜய்க்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்குவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும்பட்சத்தில், உண்மையில் என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்ய மாட்டார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவின் முகத்தை காண்பித்துதான் வாக்கு கேட்டார்கள். ஆனால் ஷிண்டேவை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லையே. கடைசியில் தேவேந்திர பட்னாவிஸ்தான் வந்தார். அதற்கு காரணம் தேசிய கட்சிகளில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கும் மரபு கிடையாது.  இது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இடைஞ்சலாகும். ஏனென்றால் அவர் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க முடியும். அப்படி என்கிறபோது பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி மிகவும் தயக்கப்படுகிறார். அது நியாயமானது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் மற்றவர்கள், நான் எப்படி கோவையில் ஜெயிப்பது என கேட்கிறார்கள். பாஜகவுக்கு 5 ஆயிரம் வாக்குகள் என்றாலும், அது வெற்றி தோல்விக்கு முக்கியமானதாகும். இவற்றுக்கு எல்லாம் மேலாக ராஜ்யசபா தேர்தல் உள்ளது. விஜய்க்கும், அதிமுகவுக்கும் உள்ள பிரச்சினை அதுதான். இருவரும் கூட்டணி வைத்துக் கொள்வோம். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலை சந்திப்போம் என்றும்  அதிமுகவும் – தவெகவும் ஒரு ஒப்பந்ததிற்கு வர முடியுமா? என்றால் இரு கட்சிகளிலுமே எதிர்ப்பு இருக்கும்.

ராஜ்யசபா தேர்தலில் 6 இடங்கள் என்றால் 4 ஆளும்கட்சி,  2 எதிர்க்கட்சி போட்டியிடும். ஆனால் அந்த காலத்தில் 6 இடங்களுக்கு 7 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஒரு இடத்திற்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் உள்பட 4 எம்எல்ஏக்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த தேர்தலில் கட்சித்தாவல் தடை சட்டம் கிடையாது. செங்கோட்டையன் தலைமையில் 2,3 பேர் வந்தால் என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பலவீனமாக இருக்கிறார் என்று தேர்தல் முடிவுகள் உணர்த்தி விடும். இப்போது எடப்பாடி ஒரு நிலையை காட்டுகிறார். அது ராஜ்யசபா தேர்தலில் ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களிக்க வேண்டும் அல்லவா?. அதில் கொஞ்சம் கழன்றுவிட்டால் என்ன செய்வது?. திமுக கெயின் செய்ய முயற்சிக்கும். அப்போது 6ல் 5  தொகுதிகளை அடித்தால் திமுகவுக்கு லாபமாகும். கூட்டணியில் பாமகவுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்றால், இந்த குழப்பத்தில் அன்புமணி தோற்றுவிட்டால் என்னாகும். டேஞ்சர் கேமில் ஓடுகிறது இது. ஒரு எம்எல்ஏ வாக்களிக்க வரவில்லை என்றால் என்னவாகும்?. கணக்கு இடிக்குமல்லவா? 2 சீட்டுகள் ஒன்று அதிமுக சீனியருக்கு போட்டுவிடுவார்கள். 2வது கூட்டணி கட்சி. அது தேமுதிக கிடையாது. பாமகதான் தற்போது பேசிக் கொண்டிருக்கிறது. அன்புமணிக்கு கொடுத்து 3 வாக்கிலேயோ, 4 வாக்கிலேயோ முதல் விருப்ப வாக்கில் அவர் வெற்றி பெற முடியவில்லை என்றால், கொடுத்த வாக்குறுதியும் போய்விடும், கூட்டணியும் போய்விடும்.

வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

எல்லோரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து நினைக்கிறார்கள். ஆனால் நான் 2025 ஜுலை பற்றி நினைக்கிறேன். அப்போதுதான் ராஜ்யசபா தேர்தலிலே பிரச்சினை இருக்கிறதே. அங்கிருந்தே எடப்பாடியின் பிம்பம் சரிய தொடங்கிவிடும். எடப்பாடியின் பிம்பம் என்பது அதிமுக அவர் பின்னால் இருப்பதுதானே. ஓபிஎஸ், டிடிவி அதை மறுக்கிறார்கள். எப்போது அந்த உரைகள் உங்களுக்கு கிடைக்கும். திமுக ஒருவேளை 4 இடங்களுக்குதான் வேட்பாளர்களை நிறுத்தினால் உரைகள் கிடைக்காது. ஆனால் அவர்கள் 5 ஆக நிறுத்தினால்? ஏனென்றால் திமுகவில் பதவிக்காலம் முடியும் மாநிலங்களவை எம்.பி-க்கள் அனைவரும் மூத்த நிர்வாகிகள் ஆவர். ஒன்று அவர்களை மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.  திமுகவுக்கு மிகவும் அழுத்தம் உள்ளது.

நாம் தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்று சொல்லி, திமுக 5 வேட்பாளர்களை நிறுத்தினால். ஏற்கனவே இருப்பவர்களுக்கு 4 இடங்களை கொடுத்துவிட்டு, புதிய நபருக்கு ஜெயித்தால் ஜெயித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால்? அதிமுகவினர் மிகவும் சிரமப்படுவார்கள். இதேபோல்தான், எம்ஜிஆர் காலகட்டத்தில் நாவலரின் தம்பி செழியன் தோல்வி அடைந்தார். அதற்காக எம்ஜிஆர் மிகவும் வருத்தப்பட்டார். வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு இடம் பிரச்சினையாகி, அதிமுகவில் இருந்து அவருடைய கடனை அடைத்தார்கள். இருந்தபோதும் அது சரியாக அமையவில்லை. அந்த கோபத்தில் எம்ஜிஆர் கலைத்ததுதான் எம்.எல்.சி. அதை இன்றுவரை மீண்டும் கொண்டுவரவே முடியவில்லை.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

அதிமுக – பாஜக கூட்டணி அமையும்போது, எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக விஜய் பிரச்சாரம் செய்ய முடியாது. மாற்றி எடப்பாடியும் விஜய் முதலமைச்சர் என்ற பிரச்சாரம் செய்ய முடியாது. இல்லை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பார்க்கலாம் என்றும் சொல்ல முடியாது. அது மாதிரியான கடினமான சூழலாகும். நான் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை பார்க்கிறேன். எதற்காக விஜய்க்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்? விஜயுடன் சிஆர்பிஎப் உயர் அதிகாரகள் ஆலோசனை. என்ன செய்தி இது?. அவரேதான் பவுண்சர் வைத்திருக்கிறாரே. எதற்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு? உயர்நீதிமன்றம் கட்சி கூட்டத்திற்கு பாதுகாப்பு கேட்டால், காசை அந்த கட்சியிடம் இருந்து வாங்குங்கள் என்று நேற்றுதான் சொன்னது. அவருக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கிய நகர்வு எதை காட்டுகிறது?. இதெல்லாம் அரசியல்தான்.

அதிமுக பலவீனமாக வேண்டும், அப்போது தான் நமக்கு லாபம் என்று டெல்லி நினைக்கிறது. அப்படி அதற்கான காய்களை எப்படி நகர்த்துவது. அண்ணாமலையின் 3 வருடத்தில் உள்ள பேச்சுக்களை எடுத்துப்பார்த்தோம் என்றால் அவர் இவற்றை எல்லாம் சொல்லிவிட்டார்.எத்தனை நாட்களுக்கு கூட்டணி கட்சிகளுக்கு சலாம் போட்டுக் கொண்டிருக்க முடியும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினாரா? இல்லையா? அவர் மிகவும் வெளிப்படையான மனிதர். அவருடைய அனைத்து திட்டங்களையும் முன்பே சொல்லிவிட்டார். நீங்கள் அதை புரிந்துகொண்டு நடக்கவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ