spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆபரேஷன் சிந்தூர் எதிரொலி! "இந்தியாவுக்கு பதிலடி கொடுங்கள்"! பாக். ராணுவத்துக்கு உத்தரவிட்ட  பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி! “இந்தியாவுக்கு பதிலடி கொடுங்கள்”! பாக். ராணுவத்துக்கு உத்தரவிட்ட  பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

-

- Advertisement -

இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகளையும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகளையும் குறிவைத்து “ஆபரேஷன் சிந்தூர்” என்கிற பெயரில் இந்திய ராணுவம் நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலுக்கு கிட்டத்தட்ட 2 வாரங்களுக்குப் பிறகு இந்த “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையானது எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடைபெற்றுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டமைப்புகளை தவிர்த்து, இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ மோதலை தூண்டாமல் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிப்பதில் மட்டுமே இந்தியா கவனம் செலுத்த முயற்சித்துள்ளதை காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் தனித்துவங்கள் குறித்து  தமது அமைச்சர்களுக்கு இன்று விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல்களை தேசிய பெருமையின் ஒரு முக்கிய தருணமாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து பிரதமர் மோடிக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த ஆதரவு என்பது, இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் துல்லியமான செயல்படுத்துதல், பெரிய அளவிலான ராணுவ ஈடுபாட்டை அதிகரிக்காமல் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான மூலோபாய அணுகு முறையை பிரதிபலித்துள்ளது.

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், தங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு உறுதியாக மறுத்து வந்தது. இருந்தபோதிலும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு பிரிவு பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக்குழு இன்று கூடி, இந்தியாவின் தாக்குதலை நியாயப்படுத்த முடியாத ஆக்கிரமிப்புச் செயல் என்று கண்டனம் தெரிவித்தது. தங்களது மண்ணில் பயங்கரவாத முகாம்களை வைத்திருப்பது தொடர்பான இந்தியாவின் குற்றச் சாட்டுகளை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நிராகரித்து உள்ளதையும், பகல்ஹாம் தாக்குதல் விவகாரத்தில் வெளிநாடுகள் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்துவதற்கான பாகிஸ்தானின் முந்தைய வாய்ப்பை இந்தியா ஏற்கவில்லை என்பதையும் குழுவின் அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான் மண்ணிற்குள் நிழ்த்தப்பட்டுள்ள இந்தியாவின் தாக்குதலை “தூண்டப்படாத, கோழைத்தனமான மற்றும் சட்ட விரோதமான போர்ச் செயல்” என்றும் பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில்  குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகள் பயங்கரவாதிகளின் நிலைகள் அல்ல, பொதுமக்கள் இடங்கள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தாக்குதலுக்கு  தேவையான எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் தயாராகுமாறு பாகிஸ்தான் அரசு, தமது ஆயுதப் படைகளுக்கு ஏற்கனவே அதிகாரம் அளித்துள்ளது. இந்த நிலைப்பாடானது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பையும், பொருத்தமானதாகக் கருதப்படும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அதன் தயார் நிலையையும் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு இந்திய தூதரை நேரில் அழைத்து, முறையான எதிர்ப்புக் குறிப்பை வழங்கியுள்ளது. அப்போது பாகிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அதாவுல்லா தரார், இந்தியாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதற்கான  உரிமை பாகிஸ்தானுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதற்கான திறனை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதன் மூலம் சாத்தியமான பதில் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தயார் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர ரீதியிலான மோதல் என்பது, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும், இரு தரப்பினரும் தங்களுடைய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை குறித்து உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர்.

MUST READ