உலகளவில் வெவேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தந்தையர் தினம், பொதுவாக ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று உலகம் முழுவதும் ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த நாளில், தந்தையர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குடும்ப உறவுகளில் அசைக்க முடியாத ஆணிவேர் போன்றது ‘அப்பா’ எனும் உறவு. ஒரு நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக, தலைவனாக என தந்தையர்கள் வகிக்கும் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு நிலையான வலிமையுடன் குடும்பத்தை வழிநடத்துறது. எல்லா அப்பாக்களும் ராஜாக்களாக இருப்பதில்லை; ஆனால் எல்லா பிள்ளைகளும் தங்களது அப்பாக்களால் இளவரசிகளாகவும், இளவரசனாகவும் தான் வளர்க்கப்படுகிறார்கள். தான் பட்ட கஷ்டன் தன் பிள்ளைகள் படக்கூடாது என வறுமை, நோய், இயலாமை என தன் மீது எரியப்படும் அம்புகளை முதுகில் தாங்கிக்கொண்டு, அடைகாத்து வைத்திருந்த பிள்ளைகளை சிறகு முளைத்த பறவைகளாய் பறக்க விடுகின்றனர்.
அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு என்னும் வரிக்கு ஏற்ப ஒவ்வொரு பிள்ளைக்கும் அறிவு ஆசானாக தந்தையே இருந்து வருகிறார். தன் மகனுக்கோ, மகளுக்கோ என்ன தேவை இந்த உலகிலே என்பதை அறிந்து முதலில் அதை கொடுத்திடும் உறவே தந்தை.. உள்ளம் பொங்க அன்பை நிறைத்து வைத்திருக்கும் பொதுவாகவே அதை வெளிக்காட்டிக்கொள்பதில்லை.. அப்பாக்களின் கண்டிப்புகள் மட்டுமே பெரிதாக வெளியில் தெரியும்.. நாம் இதுவரை பார்த்து வந்த சினிமாக்களிலும் , இப்படியே காட்சி படுத்தப்பட்டு வந்தன.. தந்தை என்றாலே கோபம், கண்டிப்பு, அட்வைஸ் செய்பவர் என்கிற எண்ணங்களே இளம் தலைமுறையிடம் வேரூன்றிக்கிடக்கிறது.
மாறாக ‘அப்பா’ என்னும் மந்திரச்சொல்லுக்குப் பின்னால் ஆயிரமாயிரம் உணர்வுகள் புதைந்துள்ளன. அப்படியான தந்தை மற்றும் பிள்ளைகளின் உறவை நா. முத்துக்குமார் அழகாக எழுதியிருப்பார் தனது பாடலில். ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னாள்.. தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே’ தாய் மற்றும் தெய்வம் கூட தந்தைக்குப் பின்னர்தான் என்று சொல்லியிருப்பார். அந்த அளவிற்கு ஒவ்வொரு குடும்பத்தையும் இரும்பு மனிதனாய் நின்று காக்கும் தெய்வங்களான அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்..!!
முருகன் மாநாடு அஜெண்டா! மரண பீதியில் அதிமுக! தலைதெறிக்க ஓடும் பாமக, தேமுதிக!