காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டிய காதலன் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார், உடல் 3 நாட்கள் பிறகு மீட்கப்பட்டது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் நிஷாந்த்(29), இவர் பள்ளியில் படிக்கும் போது ஒரு இளம் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர் திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணிடம் 68 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று கொண்டு காதலியை திருமணம் செய்து கொள்ளாமல் சென்னையில் தொழிலதிபரின் மகள் ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்றது.

இது குறித்து நிஷாந்தின் காதலி கடந்த 2 ஆம் தேதி விருகம்பாக்கம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சென்னையில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் நடக்க இருந்த திருமணம் நின்று போனது.
மேலும் நிசாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான நிசாந்த்தை தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுக்கு செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.
அவரது நண்பரின் கார் எடுத்து வந்து போரூர் மேம்பாலத்தின் மீது நிறுத்தி விட்டு போரூர் ஏரியில் குதித்து விட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், மெரினாவில் இருந்து நீச்சல் வீரர்களும் கடந்த இரண்டு தினங்களாக தேடி வந்த நிலையில் ஏரியில் நிஷாந்தின் உடல் ஏதும் கிடைக்காததால் நேற்று தேடுதலை நிறுத்தி விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை போரூர் ஏரியில் உடல் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மிதந்து கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அது நிஷாந்தின் உடல் என உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரது உடலை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டிய காதலன் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது