Homeசெய்திகள்சென்னைகொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!

கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!

-

- Advertisement -

சென்னையில் கொசுவா்த்தியால் ஒரு குடும்பமே தீக்கிரையானது.கொசுவா்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!சென்னை  கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் கொசு வா்த்தியால் ஒரு குடும்பமே தீக்கிரையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு பாா்த்திபன் (33) என்ற இளைஞா் கொசுவா்த்தி ஏற்றிவிட்டு உறங்கி உள்ளாா். வீட்டில் அவரது மனைவி ஜெயசித்ரா(29), மகள் ஜெயஸ்ரீ(2) ஆகியோரும் தூங்கிக் கொண்டிருந்தனா்.

இந்நிலையில் வீடு திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. பாா்த்திபன் இதனைக் கண்டதும் செய்வது அறியாமல் திகைத்தாா். தனது மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்றி வெளியே செல்ல முயன்றாா். ஆனால், அதற்குள் மளமளவென தீ பரவியது. இதனால் வீட்டில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.

we-r-hiring

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசாா் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனா்.

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!

MUST READ