திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2012-ம்ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.

தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் பணி நிரந்தரம் கோரி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்தது.
அதனை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
மாணவர்கள் எதிர்கால நலனுக்காக படுபடும் ஆசிரியர்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.