நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சியான் என்ற ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரம். இவர் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதே சமயம் சினிமா மீது தான் கொண்ட அதீத காதலினால், ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்காகவும் தன்னை மெழுகாய் உருக்கி நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விடுவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சேது, காசி, பிதாமகன் போன்ற படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து தங்கலான் படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் விக்ரம். மேலும் கடைசியாக இவர் தன் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து மண்டேலா, மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வினி இயக்கத்தில் தனது 63 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் நடிகர் விக்ரம், வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது. அதாவது பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தான் வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விக்ரம் கேட்கும் சம்பளத்தை படக்குழு கொடுக்க தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் ராஜமௌலி படத்தில் நடிக்க வேண்டும் என்றால் நீண்ட நாட்கள் தேவைப்படுவதால் விக்ரமுக்கு கொஞ்சம் தயக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.