மணிரத்னம் – சிம்புவின் புதிய படத்தில் பெரிய ஹீரோ ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தனித்துவமான பல படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது இயக்கத்தில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம் நாளை மறுநாள் (ஜனவரி 5) உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் ஆகியோரும் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் சமீபகாலமாக மணிரத்னம் – சிம்பு கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம் உருவாக இருப்பதாகவும் அந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகப் போகிறது எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படம் தான் சிம்புவின் 49வது படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பெரிய ஹீரோ ஒருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஆனால் அந்த ஹீரோ யார்? என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.