spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம்

-

- Advertisement -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரபல நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்தார்.

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக அருண் விஜய் வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். 90களில் தொடங்கி அருண் விஜய் கிட்டத்தட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் முதன்முதலாக வில்லன் வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நடிகர் அருண் விஜயின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது

we-r-hiring
இதை எடுத்து அவர் நடித்த தடம் திரைப்படம் விமர்சனம் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றத. இப்படத்தின் வெற்றி அருண் விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அளித்தது. தொடர்ந்து சினம் யானை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். யானை படத்தை அவரது மைத்துனர் ஹரி இயக்கியிருந்தார். இதனிடையே பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்

அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மிஷன் சேப்டர் ஒன். விஜய் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். பொங்கல் பண்டிகை ஒட்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் அருண் விஜய், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் அருண் விஜய்யை பார்த்த ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுக்க அவரை சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ