நடிகர் ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது SK 23 எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதேசமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஏற்கனவே சூர்யா நடிக்க இருந்த புறநானூறு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா விலகியதன் காரணமாக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதன்படி விரைவில் புறநானூறு என்று தலைப்பு மாற்றப்பட்டு புதிய தலைப்பு வைக்கப்பட இருக்கிறது. தற்போதைக்கு SK 25 என்று சொல்லப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிப்பதாகவும் புதிய தகவல்கள் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி ஜெயம் ரவி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர் சில கண்டிஷன்களை அடுக்கியுள்ளாராம்.
அதாவது, இந்த படத்தில் வில்லனாக நடிக்க தான் கேட்கும் சம்பளத்தை கொடுக்க வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் என்னை அடிப்பது போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது எனவும் கண்டிஷன் போட்டுள்ளாராம். அதுமட்டுமில்லாமல் தேதிகளில் கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் விளம்பரங்களில் சிவகார்த்திகேயனுக்கு இணையான முக்கியத்துவம் தனக்கு கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளாராம். மேலும் இந்த படத்திற்காக நடிகர் ஜெயம் ரவி 25 முதல் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.