- Advertisement -
இன்று அதிகாலை உயிரிழந்த கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு, நடிகரும், சூர்யா, கார்த்தியின் தந்தையுமான சிவகுமார் இரங்கல் தெவிவித்துள்ளார்.

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இதைத் தொடர்ந்து விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மியாட் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் குணமடைந்து வீடு திரும்பினார். தேமுதிக கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் திடமாக கலந்து கொண்டார். இந்நிலையில், திடீரென அவர் எதிர்பாராத விதமாக இன்று காலை உயிரிழந்தார். விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமாரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அது தொடர்பான பதிவில்,



