spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய்யின் கோட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்... படப்பிடிப்பு தொடருமா?...

விஜய்யின் கோட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்… படப்பிடிப்பு தொடருமா?…

-

- Advertisement -
விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, சினேகா, லைலா,  ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும் இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திரையரங்குகளில் வௌியாகும் என்று படக்குழு அறிவித்தது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஜெயராமுக்கான பகுதி, புதுச்சேரியில் பல இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில் அதிரடி ஆக்‌ஷன்காட்சிகள் உருவாக்கப்பட்டு வந்தன. இந்த காட்சிகளுக்காக பட்டாசு வெடித்திருக்கிறார்கள். இதனால், அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அனுமதி பெறாமல் படக்குழு வெடி பொருட்களை பயன்படுத்தியது, படக்குழுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், விளக்கம் கேட்டு படக்குழுவிடம் அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதிய சிக்கலால் கோட் படப்பிடிப்பு தொடருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MUST READ