spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் சரத்பாபு - மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சரத்பாபு – மருத்துவமனையில் அனுமதி

-

- Advertisement -

பிரபல நடிகர் சரத்பாபு(71) உடல்நிலை குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகர் சரத்பாபு 1977 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பின்னர், முள்ளும் மலரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் அவர் பாடிய “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது வந்து மோதுதம்மா” என்ற பாடல் அன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்தது.

we-r-hiring

நடிகர் சரத்பாபு - மருத்துவமனையில் அனுமதி

இவர் ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடித்த அவர் பின்னர் குணச்சித்திர நடிகராக திரையில் நடிக்க தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அண்ணாமலை, முத்து போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டது.

நடிகர் சரத்பாபு - மருத்துவமனையில் அனுமதி

மேலும், உதிரிப்பூக்கள், நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, நெற்றிக்கண் சட்டம், ஆளவந்தான் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் சமீபத்தில் திரைக்கு வந்த பாவி சின்காவின் வசந்த முல்லை.

இப்பொழுது அவருக்கு 71 வயதாகிறது.இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகர் சரத் பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த தகவல் திரை துறையினர் மத்தியிலும் இவரின் ரசிகர்கள் மத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ