பாலியல் தொல்லைக்கு ஆளான அஜித் பட நடிகை… மனம் திறந்து வேதனை…
- Advertisement -

ஒன்பது வயதிலேயே சினிமாவில் தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா. ஆரம்ப காலத்தில் பல படங்களில் நாயகிகளுக்கு தங்கையாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். இளம் வயதிலேயே பல படங்களில் அவர் நடித்துள்ளார். இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ரெஜினா. அதன் பிறகு பிரசன்னா மற்றும் லைலா இணைந்து நடித்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்திருந்தார்.

தொடர்ந்து, பஞ்சாமிர்தம், அசுரா, உள்ளிட்ட பல படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இப்படத்தின் மூலம் அவரது முகம் பிரபலமும் அடைந்தது. அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து, சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் ரெஜினா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ரெஜினா, தனது சினிமா வாழ்க்கையில் தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லியதாக அவர் தெரிவித்திருந்தார். தான் ஊதிய அட்ஜஸ்ட்மென்ட் என சரி என்று கூறிய நிலையில், இறுதியாக தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக அவர் மன வேதனையும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.