spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் மகளை வீடியோ எடுத்த நபர்.. கோபத்திற்கு பின் காரணம் ....

அஜித் மகளை வீடியோ எடுத்த நபர்.. கோபத்திற்கு பின் காரணம் ….

-

- Advertisement -
கோலிவுட்டில் தல, ஏகே என அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். அண்மைக் காலங்களில் நடிப்பு மட்டுமன்றி டிராவல், பைக் ரேஸ் ஆகியவற்றிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார். இறுதியாக அஜித் நடிப்பில் விஸ்வாசம், வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார். வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து பொங்கலுக்கு வெளியான துணிவு படம் வரவேற்பை பெற்றது.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வராத அஜித்.... இதுதான் காரணமா?

தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் அஜித்தை பொருத்தமட்டில் தனது படப்பிடிப்பு தளத்தில், தான் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் அவர்களின் மனம் கலலை அடையாமல் இருக்க புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நபர். ஆனாலும், சமீபத்தில் தன்னை வீடியோ எடுத்த ஒரு ரசிகரின் செல்போனை அவரிடம் இருந்து வாங்கி அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டு பின் அவரிடம் மீண்டும் கொடுத்துள்ளார்.

மனசாட்சியே கிடையாதா...? அஜித்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்....ஏன் தெரியுமா?

இது பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் அது தொடர்பாக பேசிய பத்திரிகையாளர் ஒருவர், அது உண்மையில்லை என தெரிவித்தார். அந்த நபர் அஜித்தை இல்லை, அவரது மகளை வீடியோ எடுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அஜித், தந்தையாக சென்று அவரது செல்போனில் இருந்த வீடியோவை டெலிட் செய்தார் என விளக்கம் அளித்தார்.

MUST READ