spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதேர்தலில் வாக்களிக்காத அலியா பட்... இதுதான் காரணமா?..

தேர்தலில் வாக்களிக்காத அலியா பட்… இதுதான் காரணமா?..

-

- Advertisement -
நாடாளுமன்ற தேர்தலில் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் வாக்களிக்காதது, தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். தனது 19 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய அலியா பட், இன்று இந்தி திரையுலகின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் பிரபலமான கபூர் குடும்பத்திற்கு திருமணமாகிச் சென்ற அலியா, கடந்த ஆண்டு இறுதியிலேயே தாயானார்.

we-r-hiring
பெண் குழந்தைக்கு தாயான அலியா பட், தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். 2021ஆம் ஆண்டு வெளியான ‘கங்குபாய் கத்தியாவாடி’ படத்திற்காக தன் முதல் தேசிய விருதை அவர் பெற்றார். குடும்பம் , வாழ்க்கை என இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வரும் அலியா பட், சினிமா வாழ்வில் கடுமையாக ட்ரோல்களை சம்பாதித்த நிலையில், தற்போது பலருக்கு இன்ஸ்பிரேஷனாக பார்க்கப்பட்டு வருகிறார்

இந்நிலையில், அண்மையில் மும்பையில் நடைபெற்ற வாக்குப்பதிவில், நடிகை அலியா பட் வாக்களிக்கவில்லையாம். இதற்கு காரணம் அவருக்கு இந்திய குடியுரிமை இல்லாதது தான். அலியா பட் மட்டுமன்றி கத்ரீனா கைஃப், ஜாக்குலின் பெர்னான்டஸ், ஆகியோரும் வாக்களிக்கவில்லையாம். கனடா குடிமகனாக இருந்த அக்‌ஷய் குமார், அண்மையில் தான் இந்திய குடியுரிமை பெற்று முதல் முதலாக தனது வாக்கை பதிவு செய்தார்.

MUST READ