spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉலகில் புடவையை விட சிறந்த ஆடை இல்லை... பாலிவுட் நடிகை ஆலியா பட் நெகிழ்ச்சி...

உலகில் புடவையை விட சிறந்த ஆடை இல்லை… பாலிவுட் நடிகை ஆலியா பட் நெகிழ்ச்சி…

-

- Advertisement -
பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். தனது 19 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய அலியா பட், இன்று இந்தி திரையுலகின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் பிரபலமான கபூர் குடும்பத்திற்கு திருமணமாகிச் சென்ற அலியா, கடந்த ஆண்டு இறுதியிலேயே தாயானார்.

பெண் குழந்தைக்கு தாயான அலியா பட், தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். 2021ஆம் ஆண்டு வெளியான ‘கங்குபாய் கத்தியாவாடி’ படத்திற்காக தன் முதல் தேசிய விருதை அவர் பெற்றார். குடும்பம் , வாழ்க்கை என இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வரும் அலியா பட், சினிமா வாழ்வில் கடுமையாக ட்ரோல்களை சம்பாதித்த நிலையில், தற்போது பலருக்கு இன்ஸ்பிரேஷனாக பார்க்கப்பட்டு வருகிறார். சினிமா மட்டுமன்றி, ஃபேஷன் துறையிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் மெட் காலா ஆடை அலங்கார நிகழ்ச்சியில், இந்தியா உள்பட பல்வேறு திரை கலைஞர்களும் பங்கேற்றனர். இதில் பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அழகுபடுத்திய புடவையில் பங்கேற்ற அவர், உலகில் உள்ள ஆடைகளிலேயே மிகச்சிறந்த ஆடை புடவை தான் என்று குறிப்பிட்டுள்ளார். அந்நிகழ்ச்சியில், அவர் அணிந்து வந்த ஆடை 163 கைவினைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 79 நாட்களாக வடிவமைத்துள்ளனர்.

MUST READ