சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படம் சிவகார்த்திகேயனின் 21வது படமாகும். இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்க சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசரும், ட்ரைலரும் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அடுத்தது இந்த படமானது வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் நாளில் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான ஃப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது.
அமரன் திரைப்படம் திரைக்கு வர இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கில் அமரன் திரைப்படம் கிட்டத்தட்ட 75 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தகவல் படக் குழுவினருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் இந்த படம் திரைக்கு வருவதற்குள் ப்ரீ புக்கிங்கில் இன்னும் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று நம்பப்படுகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட அமரன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் அதிரடி கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -