சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் அரண்மனை 4. இதில் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு தங்கையாக தமன்னா நடித்திருந்தார். தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்ட நிலையில் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றி நடை போடுகிறது. இந்நிலையில் இந்த படம் உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதாவது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 100 கோடி வசூலை கட்டி தூக்கி சென்றது பெரும்பாலும் மலையாள படங்களாகவே இருந்தது. எனவே அரண்மனை 4 திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படக்குழுவினர், அரண்மனை 4 திரைப்படத்தை பக்காவாக பிளான் போட்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்திருப்பதால் படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.