spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிலைகளின் கண்களில் ரத்தம் வடிய..... வெளியானது மிரட்டலான டிமான்ட்டி காலனி 2 பர்ஸ்ட் லுக்!

சிலைகளின் கண்களில் ரத்தம் வடிய….. வெளியானது மிரட்டலான டிமான்ட்டி காலனி 2 பர்ஸ்ட் லுக்!

-

- Advertisement -

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி, சனந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது. ஹாரர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படத்தை அஜய் ஞனமுத்து இயக்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

we-r-hiring

இதன் பிறகு தற்போது 7 வருடங்கள் கழித்து டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இந்த படத்தையும் அஜய் ஞானமுத்து இயக்க அருள்நிதி தான் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வி ஜெ அர்ச்சனா, முத்துக்குமார், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட் என்டர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததைதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் வருகின்ற செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மிரட்டலான பின்னணி இசையுடன் ஒரு அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை வீடியோவாகவே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வீடியோவில் தொடக்கத்தில் WELCOME TO THE DARKNESS என்ற வரிகளுடன் கல்லறைகள் காட்டப்பட்டு சிலைகளின் கண்களில் இருந்து ரத்தம் வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக அமானுஷ்ய மனிதனாக அருள்நிதி கையில் ஓஜா போடுடன் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

MUST READ