அருண் விஜய் சமீபத்தில் நடந்த பேட்டியில் தன்னுடைய அடுத்த படங்கள் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் தற்போது தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் இவருடைய கேரக்டர் வலுவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை (அக்டோபர் 1) திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அருண் விஜய், ‘மான் கராத்தே’ படத்தின் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘தடம்’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள், டீஸர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில் அருண் விஜய் சமீபத்தில் நடந்த பேட்டியில் தன்னுடைய அடுத்த படங்கள் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “இட்லி கடை படத்திற்கு பிறகு ரெட்ட தல படம் வெளியாக இருக்கிறது. அதன் பின்னர் நான் இன்னும் சில கதைகளை கேட்டிருக்கிறேன். எனக்கு ஒரு கலகலப்பான படம் பண்ண வேண்டும் என ஆசை இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு கதைகளை கேட்டிருக்கிறேன். இது மிகவும் உற்சாகமாக இருக்கும். விரைவில் எல்லாம் முடிந்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.