spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெள்ளித்திரைக்கு வரும் சக்திமான்... களமிறங்கும் தென்னிந்திய இயக்குநர்...

வெள்ளித்திரைக்கு வரும் சக்திமான்… களமிறங்கும் தென்னிந்திய இயக்குநர்…

-

- Advertisement -
விரைவில் திரைப்படமாக்க உள்ள சக்திமான் கதையை, பிரபல தென்னிந்திய இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

90ஸ் கிட்ஸ்களின் மனதைக் கவர்ந்த திரைப்படங்கள் மட்டுமல்ல, ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உள்ளன. 90 களில் ஒளிபரப்பான ஏராளமான நிகழ்ச்சிகள், குட்டி சுட்டிகளின் கவனத்தை பெரிதாக கவர்ந்தது. அதில் முக்கியமான ஒன்று சக்திமான். இந்த தொடரை நினைவில் இல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சக்திமான் தொடர் மிகவும் பேமஸ். சக்திமான் தொடர் கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை டிடி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

we-r-hiring
இத்தொலைக்காட்சி தொடரில் முகேஷ் கண்ணா தயாரித்து, அவரே சக்திமானாக நடித்திருந்தார். இத்தொடரின் சூப்பர்
ஹீரோவான சக்திமான் இன்றைய வரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், சக்திமான் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளது. ஆனால் கொரனாவால் ஏற்பட்ட பிரச்சனையால் படம் தடைபட்டு போனது. இந்நிலையில், தற்போது மீண்டும் தயாரிப்பு பணியை கையில் எடுத்துள்ளனர்.

பேசில் ஜோசப் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. சுமார் 550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகிறது. பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்தை முதலில் ஓம் ராவத் இயக்குவதாக ஒப்பந்தமானது. ஆனால், அவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறாததால், படம் கைமாறியது. அதன்படி, தற்போது இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் இயக்குகிறார். மின்னல் முரளி என்ற வெற்றிப்படத்தை கொடுத்தவர் இவர். 2025-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ