spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநீதித்துறையின் நேர்மை குலைகிறது... அக்‌ஷய் குமார் படத்திற்கு எதிராக வழக்கு...

நீதித்துறையின் நேர்மை குலைகிறது… அக்‌ஷய் குமார் படத்திற்கு எதிராக வழக்கு…

-

- Advertisement -
நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையிலான படத்தில் நடிப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார். இவர் இந்தியில் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது சிங்கம் அகெய்ன் படத்தில் அவர் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் அவர் வில்லனாக நடித்து கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் தமிழில் படம் நடிக்கவில்லை. இருப்பினும், அண்மையில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகினார். விஷ்ணு மஞ்சு நடிக்கும் கண்ணப்பா திரைப்படத்தில் சிவன் வேடத்தில் நடிக்க அக்‌ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring
இதன் மூலம் இவர் டோலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் தான் இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் அவர் நிறைவு செய்து விட்டார். இந்நிலையில், அக்ஷய் குமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ஜாலி எல்எல்பி3. இத்திரைப்படத்தில் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளை கேலி செய்து காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி, வக்கீல்கள் சங்க தலைவர் புகார் மனு அளித்துள்ளார்.

நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையில் படம் உள்ளதாகவும், நடிகர் அக்‌ஷய் குமார், இயக்குநர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

MUST READ