இயக்குனர் சீனு ராமசாமி தியேட்டர் வாசலில் பொதுமக்களிடம் விமர்சனம் கேட்பது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் கங்குவா திரைப்படம் வெளியானது. இந்த படம் தமிழகத்தில் மட்டுமே காலை 9 மணி முதல் ஒளிபரப்பப்பட்டது. மற்ற மாநிலங்களில் அதிகாலைக் காட்சிகளுடன் இப்படம் வெளியானது. எனவே ரசிகர்கள் பலரும் முதல் காட்சியை பார்த்த பின் தங்களின் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் கங்குவா படத்திற்கு எதிராக எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்தப் படம் வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது. அதேசமயம் கோடிக்கணக்கில் எடுக்கப்பட்ட படங்களை அதிகாலையிலேயே முதல் ஷோவை பார்த்துவிட்டு யூட்யூப் மூலம் அந்தப் படத்தின் விமர்சனங்களை பதிவிட்டு அதை காலி செய்கின்றனர். ஆகையினால் திரையரங்க வளாகங்களின் முன்பு ரசிகர்களின் கருத்தை யூட்யூபர்கள் வீடியோ எடுப்பதை அனுமதிக்க கூடாது என திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. எனவே இது குறித்து திரை பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமியும் தனது கருத்தினை தெரிவித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே திரையரங்க வளாகத்தின் முன் ரசிகர்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்க வேண்டும் என சொல்வது சரியான முடிவு கிடையாது. ஒவ்வொரு விமர்சகர்களும் தங்களின் விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்து விட்டு ஒவ்வொரு படத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் தற்போது, “திரையரங்கு வாசலில் பொதுமக்களிடம் விமர்சனம் கேட்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும். விமர்சனம் இல்லையென்றால் சிறிய படங்கள் ரசிகர்களின் கவனம் பெறாமல் போய்விடும். பொதுவாக படம் பார்த்தபின் விமர்சனங்களை படிப்பது என்னுடைய வழக்கம். ஒரு படத்தை பா நாம் பார்க்காத கோணத்தில் விமர்சகர் பார்த்துள்ளார் என்று ஆச்சரியப்படுவேன்” எனவும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.