பிரபல இயக்குனர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சித்திக். இவர் தமிழில் விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக இவர் தமிழில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படத்தை இயக்கினார்.

இந்நிலையில் கடந்த சில காலமாக சிறுநீரக மற்றும் நிமோனியா பிரச்சனையால் சிகிச்சை எடுத்து வந்துள்ளார் இயக்குனர் சித்திக். இன்று மதியம் மூன்று மணி அளவில் அவருக்கு தீவிரமான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி தமிழ் மற்றும் மலையாள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.