spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குநருடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாக்குவாதம்... அசோக் செல்வனின் சீரிஸ் படப்பிடிப்பு நிறுத்தம்...

இயக்குநருடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாக்குவாதம்… அசோக் செல்வனின் சீரிஸ் படப்பிடிப்பு நிறுத்தம்…

-

- Advertisement -
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்தார். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதேபோல, இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இவர் முன்னதாக கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து புதிய வெப் தொடரை தயாரிக்கிறார். நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்த வெப் தொடருக்கு கேங்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.நோவா ஆபிரகாம் இயக்குகிறார்.

இந்த இணைய தொடரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இந்த படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்நிலையில், இணைய தொடரின் இயக்குநர் நோவா ஆபிரகாமுக்கும், தயாரிப்பாளர் சௌந்தர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணாக படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

MUST READ