தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் நிலையில் தற்போதைய இயக்குனராகவும் கலக்கி கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் இயக்குனராக அறிமுகமான பவர் பாண்டி திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதை கடந்து தனது 50 வது திரைப்படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார் தனுஷ். மேலும் இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படமும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவ்வாறு பிஸியான இயக்குனராக வலம் வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக மேலும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய், அசோக் செல்வன், ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகை நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனராம். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறாராம். அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தேனி பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு இட்லி கடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.