குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் நடிகர் அஜித்தும் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். எனவே படம் தொடர்பான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜனவரி 28) முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படப்படிப்பில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இவருடைய சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் தொடங்கிய ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு…. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்!
-
- Advertisement -