Homeசெய்திகள்சினிமாபொறுத்துக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாதது - கமல்ஹாசன் இரங்கல்

பொறுத்துக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாதது – கமல்ஹாசன் இரங்கல்

-

- Advertisement -
இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளரும், பாடகருமானவர் பவதாரிணி. திரைத்துறையில் இவர் 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியான 10 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில் கல்லீரல் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இசையமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மறைந்த பாடகி பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார். திரை நடிகர், நடிகைகள், பாடகர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் பலரும் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ