இந்திய திரை உலகில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் பான் இந்தியா படங்களில் ப்ராஜெக்ட் கே மிக முக்கியமான படமாக உள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன்,திஷா பதானி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநதி (நடிகையர் திலகம்) படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. .
இப்படம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
மேலும் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் ப்ராஜெக்ட் கே படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “50 வருடங்களுக்கு முன் நான் நடன இயக்குனராகவும், உதவி இயக்குனராகவும் இருந்தபோது அஸ்வினி என்ற பெயர் தயாரிப்புத் துறையில் பெரிய அளவில் பேசப்பட்டது. 50 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் இருவரும் இணைகிறோம். இந்திய திரை உலகில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் பான் இந்தியா படங்களில் ப்ராஜெக்ட்-கே மிக முக்கியமான படமாக உள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன்,திஷா பதானி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநதி (நடிகையர் திலகம்) படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. .
இப்படம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
மேலும் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் ப்ராஜெக்ட் கே படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “50 வருடங்களுக்கு முன் நான் நடன இயக்குனராகவும், உதவி இயக்குனராகவும் இருந்தபோது அஸ்வினி என்ற பெயர் தயாரிப்புத் துறையில் பெரிய அளவில் பேசப்பட்டது. 50 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் இருவரும் இணைகிறோம்.நம் அடுத்த தலைமுறையினரின் சிறந்த இயக்குனர் தலைமையை வகிக்கிறார். என் சக நடிகர்களான பிரபாஸும் தீபிகா படுகோனும் அந்த தலைமுறையினர் தான். அமிதாபச்சனுடன் இதற்கு முன்பு பணியாற்று இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அமிதாப் பச்சன் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். நானும் அந்த செயல்முறையை பின்பற்றுகிறேன்.
ப்ராஜெக்ட் கே படத்திற்காக நான் ஆவலாக காத்திருக்கிறேன். பார்வையாளர்கள் என்னை எந்த இடத்தில் வைத்திருந்தாலும், நான் திரைப்பட ரசிகன் என்பதே முதன்மையானது. அது திரைத்துறையில் எந்த ஒரு புதிய முயற்சியையும் பாராட்டக்கூடியதாக இருக்கும். ப்ராஜெக்ட் கே படத்திற்கான முதல் கைத்தட்டல் என்னுடையதாக தான் இருக்கும். எங்கள் இயக்குனர் நாக் அஸ்வினின் படைப்பால், அந்த கைத்தட்டல் நம் சினிமா உலகில் எதிரொலிக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.